இப்படத்தில் தனுஷ், ரிச்சோ கங்கோ பாத்யாய் நடிக்கின்றனர். இப்படம் பத்திரிக்கையாளர்கள் பற்றின கதை. அடுத்த தலைமுறையினர் சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் தனுஷும், செல்வராகவனும் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து ஒரு பாடலும் பாடியிருக்கிறார்கள். விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் இப்படம் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் கட்டாயம் நிறைவேற்றும். இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் நெடுநாள் கிடப்பில் கிடந்த ‘இரண்டாம் உலகம்‘ படத்தை தொடங்கவிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். செல்வராகவனும் ஹாரிஸ் ஜெயராஜும் முதன்முறையாக இப்படம் மூலம் இணைகிறார்கள்.
0 comments:
Post a Comment