Wednesday, January 4, 2012

தயாரிப்பாளரான இயக்குனர் பாண்டிராஜ்


இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த பாண்டிராஜ் தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். தற்போது பசங்க புரொடக்சன் கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனத்தின் மூலம் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறியிருக்கிறார் பாண்டிராஜ். புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு, ”நான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் எனக்காக இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் சசிகுமார். நானும் அவர் பாணியையே பின்பற்றப் போகிறேன்என்கிறார். மேலும் இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் புதுப்படத்திற்கு மெரீனா என்று பெயர் வைத்திருக்கிறார். மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்வர்களை கருவாகக் கொண்டு கதையை பின்னியிருக்கிறார். இப்படத்தில் டிவி தொகுப்பாளரான சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக களவாணி ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More