அழகான தங்கை என்றால் பளிச்சென்று நினைவுக்கு வருபவர் சரண்யா மோகன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 20 படங்களுக்குக் குறையாமல் நடித்திருந்தாலும் தமிழில் வெண்ணிலா கபடி குழுவில் மட்டுமே ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் வேலாயுதத்தில் கூட விஜய்யின் தங்கையாகவே நடித்திருக்கிறார். ஹீரோயினாக முடியவில்லையே என்ற இவரது ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக கன்னடப் படம் ஒன்று இவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. கன்னட ஹீரோ அஜித்திற்கு ஜோடியாக ஈ பூமி பானு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக கன்னடம் கற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் சரண்யா மோகன்.
0 comments:
Post a Comment